கால்நடை பராமரிப்பு :: எருமை மாடுகள் :: நோய் மேலாண்மை முதல் பக்கம்

நோய் மேலாண்மை

எருமை அம்மை (Buffalo pox)


இந்நோய் பொதுவாக இந்தியா முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. இதன் மூலம் மடி, உள்தொடை, நாசி, வாய் போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றும்.  நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள் அனைத்தும் மாடுகளில் இருப்பது போலத்தான் இதற்கு சரியான தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காயங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து ஈக்கள் மொய்க்காமல் பாதுகாத்தல் அவசியம்.

அறிகுறிகள்

நோய் தொற்றி 2-5 நாட்களில் எருமையின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். பின்பு கடுகு அளவில் சிவப்புக் கொப்புளங்கள் ஆங்காங்கு தோன்றும். உள்ளே நீரற்ற இந்தக் கொப்புளங்கள் காம்புகளின் சற்று நீளமானதாகவும், மடியில் உருண்டை வடிவிலும் காணப்படும். பின்பு இவை வளர்ந்து ஒன்றோடொன்று இணைந்து பெரிதாகிவிடும். இக்கொப்புளங்கள் தானாகவே மறைந்து, மடி பழைய நிலையை அடைந்து விடும். ஆண் எருமைகளில் இவை முடி மற்றும் அழுக்கில் மறைந்திருப்பதால் அதிகமாகத் தெரிவதில்லை.

சிகிச்சை

பொதுவாக இவை தானாகவே மறைந்து விடும். புண்கள் பெரிதாகாமல் அதை சுத்தப்படுத்த வேண்டும். 1:1000 விகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், மற்றும் போரிக் அமில களிம்பு 1:100 விகித தடவலாம். பாதிக்கப்பட்ட எருமை அப்புறப்படுத்தி தனியே பால் கறக்கவேண்டும். இந்த எருமைகளிலிருந்து கறக்கும்  பாலை நன்கு காய்ச்சிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

பிளாக் குவார்டர் (Black Quarter)

இது கால்நடை, செம்மறி ஆடுகளில் காணப்படும் ஒரு முக்கியமான நோய். தொடர்பினால் பரவாது எனினும் நச்சுத்தன்மை கொண்டது.

பரவல்

இந்நோயானது 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள எருமைகளை இந்நோய் தாக்குகிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் தான் இது அதிகமாகப் பரவும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் எருமையின் வாய் வழியே உள்ளே சென்று சில காலம் தங்கி நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

அறிகுறிகள்

சில சமயங்களில் எருமைகள் அறிகுறி ஏதுமின்றி இறந்துவிடும். இதன் முக்கியமான அறிகுறி முன் அல்லது பின் பாதத்தில் வரும் வீக்கம் ஆகும். இதைத் தேய்க்கும் போது சதை தோலில் வெடிப்பு ஏற்படும். காய்ச்சல், கால்நடை நடக்க முடியாமை, வாலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அடித்துக் கொள்ளுதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்நோய்க்கண்ட 24 மணி நேரத்தில் எருமை இறந்து விடும். பாதிக்கப்பட்ட இடம் சிறிது நேரம் மிக சூடாகவும், வலியுடனும் இருந்து பின்பு சாதாரணமாக ஆகிவிடும். பாதிக்கப்பட்ட பாகங்களின் தோல் வறண்டு, கடினமானதாக இருக்கும். செம்மறி ஆடுகளில் கழுத்து, பின் பகுதியின் சதைகள் பாதிக்கப்படும். காய்ச்சல், பசியின்மை போன்ற அறிகுறிகளும் தென்படும்.

சிகிச்சை

பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். ஏன்டிஆக்ஸிஸெரா, சர்போஃதையே போன்ற மருந்துகளும் இந்நோய்க்கு ஏற்றவை.

தடுப்பு முறை

இந்நோய் வந்தபின் சிகிச்சையளிப்பதை விட, சுகாதாரமான முறையில் வருமுன் காப்பதே சிறந்ததாகும்.இறந்த எருமைகளை அகற்றி, எரித்து நோய் பரவாமல் சுத்தம் செய்யவேண்டும். காயம்பட்ட இடங்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்.ஆலம் படிந்த ஃபாரிமலைஸ்டு கலந்த தடுப்பூசி சிறந்தது. மழைக்காலம் தொடங்கும் முன்பே தடுப்பூசி அளித்துவிட வேண்டும். செம்மறி ஆடுகளில், ஆண் மலடாக்குதல், குட்டி போடுதல் போன்ற செயல்களுக்கு முன்பு கட்டாயம் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

ஜோனிஸ் நோய் (Johne’s Disease)

சாதாரண சூழ்நிலையில் தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய் செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை போன்ற பல கால்நடைகளைத் தாக்கக்கூடியது.

பரவல்

இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கழிவுகள் தீவனம் போன்றவை மூலம் எளிதில் பரவக்கூடியது. நோய் தாக்கிய பின்பு அறிகுறிகள் வெளிப்பட 12 மாதங்களிலிருந்து சில வருடங்களாகலாம். பெரும்பாலும் 3-6 வயதுடைய எருமைகளை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் அறிகுறிகள் அதிகம் தென்படாது. அதன் கழிவுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். இவை மேய்ச்சல் நிலங்களில் 1 வருடம் வரை வாழும் தன்மை கொண்டவை. சூரிய ஒளி, அதிக அமில / காரத்தன்மையில் இது உயிர் வாழ முடியாது.

கால்நடைகளில் 2-6 வருட வயதுள்ளவை பால் கறந்த பின்பு வெளிவரும் கழிவுகளில் இதன் அறிகுறிகள் தென்படும்.

சிகிச்சை

இந்நோய் பரப்பும் கிருமிகள் கீமோதெரப்பியூட்டிக் காரணிகளுக்கு எதிர்ப்புத் தன்மை மிக்கவை. இந்நோய் வந்தபின் குணப்படுத்துவது கடினம்.

கட்டுப்பாட்டு முறை

கன்று பிறந்த உடன் தடுப்பூசி போடுதல் சிறந்தது. இந்தத் தடுப்பூசியில் ஜானிஸ் பேசில்லஸ் என்னும் நோய்த் தாக்க முடியாத குணம் உள்ளது. நோய் பாதிக்கப்பட்ட மந்தைகளில், உடனே பிற கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளித்தல் சிறந்தது.

(ஆதாரம் : டாக்டர், ஆச்சார்யா, Hand Book of Animal Husbandry.)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15